Sunday, January 21, 2007

ராம் பாகம்-2

திரும்பியவன் கண்ணில் பட்டதோ மாடர்ன் பிகர்ஸ் எல்லாம் ஜீனஸ் டீ-சர்ட் தான். அட என்ன கிரகம்டா இது, நம்ம ஊர் பொண்ணுங்க மாதிரி வருமா , ஒரு பாவாடை தாவணி போட்டு , ஒரு மொழம் மல்லிய வெச்சு. "சென்னைக்கு தெரியுமா மதுரை மல்லி வாசம் "என்று முனு முனுத்தபடியே விடுதி வந்தடைந்தான். அவன் வருத்தத்தில் உள்ள நியாயத்தை உணர இதோ



மெஸ் செல்ல எல்லோரும் தயார் ஆக, உடன் சென்றான ராம். அனைவருக்கும் சப்பாத்தி இருந்தது (வரண்ட நிலையில்) சாப்பிட அரம்பித்தான்."டேய் இப்ப தெரியுதா அம்மா சமயலோட அருமைய " என்று உள்ளுக்குள் யாரோ குமுறுவதை உணர்ந்தான்.சுத்தி அமர்ந்திருப்பவர்களின் முகத்தில் இருந்து அவர்களின் குமுறுதலை உணர முடிந்தது. "எலே என்ன லே இது சப்பாத்தி பிக்கவே முடியல" என்றான் அல்வா ஊரிலிருந்து வந்த தோனி.

மறுநாள் விடிந்தது,காலை குளிக்க பெரிய வரிசை,திடீர் என்று ஒரு அவளக்குரல் "மாப்ளா தண்ணி நின்னுடுச்சு".காலை ஒரு மணி நேரம் தான் தண்ணீர் வருமாம்.அடுத்து என்ன பக்கத்தில் இருந்த அடி குழாயில் தண்ணீர் அடித்து கொண்டு வந்து குளித்தான். முதல் நாள் கல்லூரிக்கு செல்லும் போது குளிக்காமல் போக முடியுமா??? தன்னுடன் 4 வருடம் பயில உள்ள நண்பர்களை காண அவலாய் இருந்தான்.அட தோனி நம்ம வகுப்புதான்,"ஹய் ஐ ஆம் ராம்,நம்ம ஊரு மதுரை" என்று அரம்பித்தான்."எலே மதுரையா நான் தோனி நம்ம ஊரு திருநெல்வவேலி" என்று கைகுலுக்கினர்.

ஆசிரியர் மதிப்பெண் போடுவதற்கு முன் இவர்கள் சேர்ந்து மாண்புமிகு மாணவிகளை மதிப்பிட அரம்பித்தனர்.

"டெய் மாப்ள,என்னடா இது நம்ம கிலாஸ்ல மட்டும் எல்லாம் அட்டு பிகரா இருக்கு "

"எலே அதுதான் நாம வாங்கி வந்த வரம், நான் ஸ்கூல தான் இப்படி, காலேஜ்ல எல்லாம் நல்லதா இருக்கணும்னு நல்ல வேண்டிக்கிட்டுதான் வந்தேன்.எங்க அப்பா ECE அல்லது CS எடுக்க சொன்னார் நான் தான் IT னு ஒத்த காலுல நின்னேன் "

"மாப்ளா கவலை படாதட , என்ன தான் உடம்புல எண்ணேய்ய ஓற்றி உருண்டாலும் உடம்புல ஒட்டரது தான் ஒட்டும்"
இப்படியே ராமின் வாழ்க்கை ஒரு சுவாரஸ்யமும் இல்லாமல் நகர்ந்தது. நம்ம பசங்க வாழ்க்கையில இன்பம்,துன்பம்,சிரிப்பு,அழுகை,தொந்தரவு,பகல் கனவு அகிய பல்சுவைகளும் ஒரு பொண்ணு நுழைஞ்சா தானே வரும். எத்தனையோ வாய்ப்பு அமைந்தும் "காதல்னா உணர பட வேண்டும், அதுவா நடக்கணும்" என்று எகத்தாலம் பேசியே மூன்று ஆண்டு முடிந்தது .

நான்காம் ஆண்டு தன் கல்லூரிக்கு இணைதளம் அமைக்கும் பொறுப்பை ராமு ஏற்றான்.அதற்காக தனது கை பேசியிலிருந்து குறுஞ்சொற்கள்(SMS) அனுப்பினான்.அதில் ஒரு எண் கதாநாயகியின் எண் என்பதை அவன் உணரவில்லை. அடுத்த நாள் இரவு ஒன்பதரை மணியளவில் ராமுவின் கைபேசி சினுங்கியது.

"ஹலோ" என்றான்

"
ஹலோ , திஸ் இஸ் தாண்யா . மே ஐ நோ ஊ இஸ் திஸ்"

தொடரும்...