ரம்யமான காலைப் பொழுது சென்னை வந்தடைந்தது மதுரை ராதா, "டேய் ராம் எழுந்திரு டா எக்மோர் வந்துருச்சு" வழக்கம் போல் அன்றும் அலாரம் ஆகிவிட்ட அப்பா,சளிப்புடன் எழுந்தான் ராம்.
நேரம் ஆறு ,எட்டு மணியளவில் கல்லூரி வளாகத்தில் இருக்க வேண்டும்.வழக்கம் போல் பொறியியல் கல்லூரி தான் , தமிழ்நாட்டில் ஒன்னாவதுக்கு அடுத்து ரெண்டாவது என்பது போல 12க்கு அடுத்து பொறியியல் என்பது எழுதபடாத சட்டம்.
எழும்பூரிலிருந்து கிண்டிக்கு விரைந்தது ஆட்டோ ரிக்ஷா. ஆட்டோவின் வேகத்தைவிட வேகமாக நகர்ந்தது ஆட்டோ மீட்டர்.ராம் ஒரு குட்டி தூக்கம் போட மீட்டரை கவனித்தபடி வந்தார் மிடில் கிளாஸ் அப்பா."சார் காலேசு வந்துடுச்சு,மெயின் கேட்டா சைடு கேட்டா " வினவினான் ஆட்டோ ஓட்டுனர்."எங்கயாவது நிருத்துப்பா போதும் " மகனின் கல்லூரியை பார்க்க ஆவல் இருக்காதா என்ன.
செங்கோட்டை போல் காட்சி அளித்தது அந்த கல்லூரி.
"அப்பா காலேஜ் எப்படி இருக்கு"
"சூப்பரா இருக்குட எங்களுக்குத்தான் இப்படி காலேஜ் எல்லாம் போய் படிக்க வாய்ப்பு இல்லாம போச்சு நீயாவது நல்ல படிக்கணும் பா"
"சரிப்பா வாங்க போலாம் அட்மிஷ்னுக்கு நேரம் ஆச்சு".
கல்லூரி சேர்ப்புக்காக குறிப்பிட்டு இருந்த கூடும் இடந்திற்கு விரைந்தனர்.
எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் (எங்கு தான் கூட்டம் இல்லை). சரி திறமையை பயன்படுத்தி முன்னாடி செல்ல முயற்சிததான் ராமு, வந்தார் ஒரு அதிகாரி "எல்லோரும் ரங்க் வரிசையில் உள்ளே வாங்க " என்றார் . 452 வது இடத்தில் நின்றான் "சே entrancela அந்த questiona correcta பண்ணி இருந்தால் 20 பேரை முந்தி இருக்கலாம் " என்று தான் செய்த பிழைகளின் விளைவை எண்ணி வருந்தினான்.
ஒரு வழியாக சேர்ப்பு முடிந்தது , "ப்ளாக் 2" 54 வது அறையின் நான்கில் ஒரு பகுதி இவனுக்கு ஒதுக்கப்பட்டது தன்னுடன் தங்கபோகும் மூவரின் குணம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் லேசாக இருந்தது . அட இது தானே இனி இவர்களின் புகுந்த வீடு கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்யும்.
பலவித யோசனையுடன் தன் அறையை கண்டு பிடித்தான்,அடேய் அப்பா சென்னையின் குப்பை மண்டியாக காட்சியளித்தது அந்த அறை.பத்து ரூபாய் வாங்கி கொண்டு நாம் அறையை சுத்தம் செய்து கொடுத்தார் டேவிட் என்ற புண்ணியவன்.
மெல்ல மெல்ல முதலாம் ஆண்டு மாணவர்களின் தங்கும் விடுதி நிரம்பியது , பல திருநெல்வேலி அரிவாள்களின் நடுவே மதுரை வீரனாக இருந்தான் ராம்.
முதலில் கரைக்காலில் இருந்து கண்ணன் வந்தான். சிரித்தபடி வாங்க வாங்க என்று சொந்த வீட்டுக்காரன் போல வரவேற்றான் பிறகு வந்தார் ஈரோட்டில் இருந்து குமார் கணினி பயில வந்துள்ளார்.
"சரிப்ப எனக்கு நேரம் ஆச்சு நான் கிளம்பறேன்" கண்ணனும் ,குமாரும் " ஓ கே அங்கிள்" என்று கோரஸ் போட்டனர்.
"சாப்பிட்டுட்டு போகலாம் பா"
"சரிடா வா போலாம்"
கல்லூரியில் உள்ள உணவக்தில் மதிய உணவை அருந்திவிட்டு . நுழை வாயிலை நோக்கி நடந்தனர்
"தம்பி நல்ல படிக்கணும், எங்கயும் அதிகமா சுத்த கூடாது , பசங்க கூட எந்த வம்பும் வேண்டாம் , நம்ம உண்டு நம்ம படிப்பு உண்டு ன்னு இருக்கணும்பா "
"ஹ்ம்ம். ஹ்ம்ம்ம்.. ஹ்ம்ம்ம்.. "
என்று ஹ்ம்ம்ம்.. கொட்டி கொண்டு வந்தான் ராமு. யாருக்கு தான் அறிவுரை கேட்க ஆசை. அறிவுரையின் முன்னுரை முடிந்தது.
"உடம்ப நல்ல பாத்துக்கோ , நல்ல சாப்பிடணும், மெஸ் சாப்பாடு சரி இல்லைன்னா வெளிய போய் எதாவது சாப்பிடு. நேரத்துக்கு தூங்கு உடம்ப கெடுத்துகாத " என்று அடுக்கி கொண்டே போனார் "
"ஹ்ம்ம். ஹ்ம்ம்ம்.. ஹ்ம்ம்ம்.. " இதற்கும் வெறும் ஹ்ம்ம்ம்ம்... தான்.
பேருந்து நிறுத்தம் வந்தது , அங்கும் தொடர்ந்தது அறிவுரை மழை . பெற்ற பாசம் பிரியும் போது கண்ணில் மெல்ல நீர் வழிய மகனுக்கு தெரியாமல் மறைத்து கொண்டார்.பேருந்தும் வர, பேருந்தில் ஏரியபடி கை அசைதார்.
தன்னை அரியாமல் தன் கண்ணிலும் நீர் வழிய விடுதியை நோக்கி் நடந்தான் ராம்.
தொடரும்....
Friday, December 15, 2006
Subscribe to:
Comments (Atom)